காணொளி: முதலைக்கு முன் சடங்குகள் செய்த பூசாரி - என்ன நடந்தது?
காணொளி: முதலைக்கு முன் சடங்குகள் செய்த பூசாரி - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
பூசாரி ஒருவர் முதலைக்கு முன் சடங்குகள் செய்யும் காட்சி இது. இந்தச் சம்பவம் தெலங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் நடந்துள்ளது.
ஆற்றின் பாலத்திற்குக் கீழே கண்டறியப்பட்ட இந்த முதலையை மீனவர்கள் பிடித்து வந்துள்ளனர். மழை பெய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கு பூஜை செய்யுமாறு உள்ளூர் மக்கள் அனில் சர்மா என்ற பூசாரியிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து அவர் அந்த முதலைக்கு பூஜை செய்தார்.
சடங்குகள் நடைபெறும் வரை முதலை அசையாமல் இருப்பதை இந்தக் காணொளி காட்டுகிறது. பின்னர், தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அதை மீட்டு மீண்டும் ஆற்றில் விட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



