காணொளி: தஞ்சாவூர் அழைத்துச்செல்லப்படும் உதயநிதி ஸ்டாலின்

காணொளிக் குறிப்பு, அவதூறு வழக்கில் கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட உதயநிதி.
காணொளி: தஞ்சாவூர் அழைத்துச்செல்லப்படும் உதயநிதி ஸ்டாலின்
பிரசுரிக்கப்பட்டது

காவிரி விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து தஞ்சையில் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், காவிரி குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கவலை இல்லை என்றும், அவரது ஒரே கவலை திமுக மீது வழக்குப் போடுவதுதான் என்றும் குறிப்பிட்டார்.

பேச்சுக்கு நடுவே கூட்டத்தில் இருந்து எழுந்த முழக்கங்களைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்ட சில விஷயங்களே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன. அது முதலமைச்சரை அவமதிக்கும் விதமாக உள்ளதாக தவெக மட்டுமல்லாது பிற அரசியல்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.

இதனையடுத்து வழக்கு பதியப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீசார் அழைத்து சென்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு