You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மீண்டும் 'ராஜிநாமா' கோரும் சிஜேபி - தலைமை நீதிபதி கூறியது என்ன?
இந்திய பார் கவுன்சில், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி அகாடமி (NALSAR) சட்டப் பல்கலைக் கழகத்தின் 2026ஆம் ஆண்டு மாணவர் பிரிவில் பட்டம் பெறும் மாணவர்களின் வழக்கறிஞர் பதிவு (enrolment) செயல்முறையை நிறுத்தி வைத்தது. பின்னர் அந்த முடிவைத் திரும்பப் பெற்றது.
அதன் பின்னர், மனன் மிஸ்ராவும் பிசிஐ-யும் சமூக ஊடகங்களில் விவாதத்தின் மையமாக மாறினர். இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்திய பார் கவுன்சிலை விமர்சித்து, இது "தனக்கும் மாணவர்களுக்கும் இடையிலான விஷயம்" என்று கூறியதுடன், பிசிஐ-யின் "தேவையற்ற தலையீடு" குறித்துக் கண்டனம் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு