உயிருக்கே ஆபத்தான தொற்றுக்கு தீர்வாகும் 'மலம் மாற்று சிகிச்சை'

உயிருக்கே ஆபத்தான தொற்றுக்கு தீர்வாகும் 'மலம் மாற்று சிகிச்சை'
பிரசுரிக்கப்பட்டது

மனித உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் குடலில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் பங்கு மிக முக்கியமானது என்று மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், குடல் சார்ந்த கடுமையான தொற்றுகளைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் நவீன மருத்துவ முறையான 'மலம் மாற்று சிகிச்சை' தற்போது உலகளவில் பெரும் கவனம் பெற்று வருகிறது.

வழக்கமான ஆன்டிபயாடிக் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத, உயிருக்கே ஆபத்தான வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வீக்கத்தை ஏற்படுத்தும் 'Clostridioides difficile' (C. diff) என்ற பாக்டீரியா தொற்றுக்கு இச்சிகிச்சை மிகச்சிறந்த இறுதித் தீர்வாக அமைகிறது.

ஒரு ஆரோக்கியமான நபரின் மலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்களை, குடல் நோய் பாதிப்புள்ள மற்றொரு நபரின் குடலுக்குள் செலுத்துவதே இச்சிகிச்சையின் அடிப்படை வடிவமாகும்.

மனிதக் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் சமநிலை சீர்குலையும் போது ஏற்படும் கடுமையான பாதிப்புகளைச் சீரமைக்க இந்த மாற்று சிகிச்சை உதவுகிறது. எந்தவொரு தொற்றுநோயும் இல்லாத முழு ஆரோக்கியமுள்ள நபர்களிடமிருந்து சேகரிக்கப்படும் மலம், ஆய்வகத்தில் முறையாகச் சுத்திகரிக்கப்பட்டு கோலனோஸ்கோபி அல்லது சிறப்பு மாத்திரைகள் மூலம் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் மருத்துவர் பாசுமணி.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு